ஞாயிறு, 17 மார்ச், 2024

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல

நான் எழுதியதை நீயோ நீ எழுதுவதை நானோ எழுதுவதில்லை நண்பா ! நீ புலம்பெயர முடிவெடுத்தாய் புகையிரத நிலையம்வரை வந்தேன் நாற்பது வருடங்கள் நீ நட்பின் இறகில் சிறகெடுத்தும் நான் குருதி தொட்டும் எழுதிக்கொண்டிருக்கிறோம் நான் மாறிவிட்டதாய் நீ சொல்கிறாய் வலியின் விசாலம் நீ அறியாய் பல உயிருறவுகளை பறிகொடுத்தேன் இனி புது உலகம் சாத்தியமில்லை நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share