வெள்ளி, 29 மார்ச், 2024

ஒளியும் இருளும் குழைந்திருந்த மாலைப்பொழுதில் பறவைகளின் வரிசை குலையாதிருந்தது குருதி உண்ணும் நுளம்புகளை போல மண் அள்ளி டிப்பர்கள் விரைந்தன மின்மினி வெளிச்சத்தில் சட்டென உயிர்கள் பிரிந்தன முடிந்த நாட்களைப்போல போன உயிர்களும் மீளவருவதில்லை உயிர்த்தானம் கொடுக்க வரிசைகுலையா அவதானம் தேவை குழந்தையொன்று பொத்து பொத்தென நடந்து வரும் சத்தம் போல் இதயம் அடித்துக்கொள்கிறது புதிய எதிர்பார்ப்புகளோடு


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share