சனி, 12 மே, 2012

இலங்கையின் இனவரலாறு


இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான்.
அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர்.

புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது 
தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு 
இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன் 
தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார். கி.முன் (247-207)தேவ நம்பிய தீசன் அனுராத புரத்தை தலை நகராய்க்கொண்டு   
ஆட்சிசெய்தான்.அப்பொழுதே பௌத்தம் முதன் முதலாய் இலங்கையிட்கு வந்தது . கி.பின் ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் என்ற நூல் 
தாதுசேனன் அரசனின் சகோதரனான மகாநாம தேரரால் 
பாளி மொழியில்தொகுக்கப்பட்டது.பௌத்தத்தில் இரு 
பிரிவுகளான மகாயானம்,தேரவாதம் ஆகியவற்றிட்கிடையிலான 
போட்டியினாலேயே அப்போது தமிழ் மொழியில் பௌத்த 
போதனைகள் நடந்தபோது அதில் அதிக முக்கியத்துவம் 
மகாயானத்திட்கு கொடுக்கப்பட்டதால் பாளிமொழி
பாவனையை தேரவாதம் எடுத்துக்கொண்டது.உண்மையில் 
அப்போது சிங்களமொழி இல்லை.   அதன் பின்பே சிங்கள மொழி உருவாக்கம் பெற்றது.
அதனால்சிங்கள மொழி அதிக தமிழ் சொற்களையும் அதன் எழுத்துவடிவங்களையும் உள்வாங்கிக்கொண்டது.
பௌத்த துறவிகள் இணைந்து தம்மதீப'க் கொள்கையை உருவாக்கினர்.
இதன்படி இலங்கைபெளத்தர்களுக்குரிய நாடு,
சிங்கள இனத்தவர் தேரவாத பெளத்தத்தின் பாதுகாவலர்கள்.என்ற 
தோற்றம் உருவாகிற்று.அப்போது பல தமிழர்கள் மகாயானம்
பௌத்தத்தை தழுவி வாழ்ந்து வந்தார்கள்.ஆனால் சிங்கள ஆட்சி 
மாற்றங்களுடன் அவர்கள் சிதைக்கப்பட்டார்கள் . பௌத்த 
துறவியால் பௌத்தத்தை வளர்ப்பதற்காக புனையப்பட்ட 
மகாவம்சத்திலேயே கி.முன் அனுராதபுரத்தை தலை நகராய்க்கொண்டு   
இலங்கையை நல்லாட்சி செய்த எட்டு தமிழ் மன்னர்களின் 
சிறு வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.  
சிங்கள வரலாற்றை கூறும் நூலானசூலவம்சத்தின் நாயகன் 
மகாபராக்கிரமபாகு(கி.பி.1140-1173)இவன் ஈழத்தின் வடக்கில் உள்ள வல்லிபுரம் என்னும் ஊரில்பிறந்தவன் .
இவனது அரண்மனைப்புலவர் போஜராஜ பண்டிதர்
இவரேசரஜோதிமாலைஎன்ற சோதிட நூலை தமிழிலே எழுதியவர். 
வரலாற்றின்படி இயக்க நாகர்கள் திராவிடர்களாகவும் ,இந்துக்களாகவும் 
கி.முன் ஐந்தாம் நூற்றாண்டில் தவறான செயல்களுக்காக இந்தியாவிலிருந்து
நாடுகடத்தப்பட்ட 
விஜனும்,அவனது சகாக்களும் ஆரியராகவும் இந்துக்களாகவும் பின் 
இவர்கள் இயக்கர்,நாகர் இனப்பெண்களை திருமணம் செய்து வந்த 
பரம்பரையினர் சிங்களராக பரிணமித்துள்ளனர்.தமிழரில் இருந்து 
சிங்கள இன,மொழி தோன்றியதும் இந்து சமயத்தில் இருந்து 
புத்த மதம் எழுந்ததும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது.
வியாபார நோக்கோடு அவ்வப்போது இலங்கை வந்த  அரபு முஸ்லீம் வர்த்தகர் மீண்டும் தாம் கடலில்
செல்ல வேண்டிய திசைக்கு செல்வதற்குத் துணையாகக் கூடிய காற்று வீசும் வரை
இங்கு தங்க வேண்டியேற்பட்டது. தமக்குத் தேவையான திரவியங்களை உள்நாட்டில்
இருந்து திரட்டிக்கொள்வதற்கும், கொண்டுவந்த வர்த்தகப் பொருட்களை
உள் நாட்டில் விநியோகிப்பதற்கும் அரபு முஸ்லீம் வர்த்தகர்களில் சிலர் இங்கு தங்கினர்.
இவ்வாறு தற்காலிகமாகத் தங்கும் காலத்தில் வர்த்தகர்கள் துறைமுக நகர்களில் வாழ்ந்த
பெண்களை விவாகம் புரியும் வழக்கம் இருந்தது. இஸ்லாம் விபசாரத்தைத் தடை செய்து,
பலதார மணத்தை அங்கீகரித்திருந்ததால் இங்கு வந்த அரேபிய வர்த்தகர்கள் இஸ்லாத்தை ஏற்ற 
பெண்களை திருமணம் செய்தனர். இதனால் முஸ்லீம் சமூகம் உருவாகிற்று.முஸ்லீம்கள் 
இலங்கையில் முதலில் கி.பின் பத்தாம் நூற்றாண்டில் பேருவளை என்ற பிரதேசத்தில் 
குடியேறியதாய் வரலாறு சொல்கிறது.    







Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share