ஞாயிறு, 27 மே, 2012

ஆழ ஊடுருவும் அணி இன்னுமொரு போர்க்குற்ற சாட்சி

ஆழ ஊடுருவும் அணி 
சிறிலங்காவின் 
இன்னுமொரு 
போர்க்குற்ற சாட்சி 

ஆழ ஊடுருவும் அணியால் 
நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் 
கொல்லப்பட்டுள்ளார்கள் 
குறிப்பாக 
மருத்துவ வாகனங்கள் 
அவர்களால் குறிவைக்கப்பட்டன.

நெடுங்கேணி வைத்தியசாலைக்கான
ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டதில் 
மருத்துவர் உட்பட ஐந்து 
ஊழியர்கள் 
அந்த இடத்தில் 
படுகொலை செய்யப்பட்டார்கள் 
ஆனைவிழுந்தானில் 
மருத்துவ வாகனம் தாக்கப்பட்டதில் 
மருத்துவத்தொண்டர் கொல்லப்பட்டார் 
மாவீரர் நாளன்று 
ஐயன்குளத்தில் ஆம்புலன்ஸ்
மீதான தாக்குதலில் 
பத்திற்கு மேற்பட்ட 
பாடசாலை மாணவிகளான 
முதலுதவித்தொன்டர்கள்
கொல்லப்பட்டனர் 
அடம்பன் சுகாதார வைத்திய அதிகாரியின் 
வாகனம் வெள்ளாங்குளத்திற்கு அருகில் 
தாக்கப்பட்டதில் 
அதில் பயணம் செய்த பாதிரியார் உட்பட 
சிலர் கொல்லப்பட்டனர்.
மருத்துவ வாகனம் ஒன்று
கண்டி வீதியில் தாக்கப்பட்டதில் 
ஐவர் கொல்லப்பட்டனர் 

பாடசாலை மாணவரை 
ஏற்றும் பஸ்வண்டி தாக்கப்பட்டு 
பல பாடசாலைப்பிள்ளைகள் 
கொல்லப்பட்டும் 
பாரிய காயத்திற்கும் உள்ளாகினர்  
இதைவிட 
பாராளமன்ற உறுப்பினர்,
உதவி அரசாங்க அதிபர்,
மனித உரிமை ஆர்வலர் என 
திட்டமிட்டு கொல்லப்பட்டனர் 
அன்றாடம் உழைக்கும் மக்கள் பலர் 
ஏதுமறியாமல்கொல்லப்பட்டனர் 

இறுதி யுத்தக்காலத்தில் 
மக்களுடன்,புலிகளுடன் கலந்து
மக்களுக்கும் புலிகளுக்கும் 
இடைவெளியை உருவாக்க முயன்றனர் 

இதுவரை 
வழமைபோல் 
சிறிலங்காவால் மறுக்கப்பட்ட 
பொய்களில்ஒ ன்று 
அவர்களால்வெளித்தெரியும் போது 
ஆழ ஊடுருவும் அணியினர் ,
அதை வழி நடத்தியோர் ,ஜனாதிபதி போன்றோரை 
சர்வதேச குற்ற விசாரணைக்கு உட்படுத்தி 
பாதிக்கப்பட்டவர்களுக்கு 
பரிகாரம் காணப்படவேண்டும் 

-நிரோன்- 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share