வெள்ளி, 18 மே, 2012

முள்ளிவாய்க்கால் கவிதைகள்

முள்ளிவாய்க்கால் ஓரத்திலே 
விடிவு முடிவான காலத்திலே
அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் 
முதுமையான பசுமை நினைவை  
சுமக்கும் வாய்க்கால் 
இப்போது பயங்கரமாய் 
இரத்தம் கலந்த சிவப்பாய் 
மனிதரை அல்ல 
சடலங்களை சுமக்கிறது 

கந்தகப்புகையை 
சுவாசித்து வாழ்ந்த மக்கள் 
கையில்லாமலும் காலில்லாமலும் 
சிறைப்பிடிக்கப்பட்டார்கள் 

- ஓவியா-

 முற்காலத்தில் 
மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் 
நேற்று 
அழுகுரல் எழுந்து 
ஊழித் தாண்டவமாடி 
இன்று 
சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது 

தொடர் வேவுவிமான இரைச்சலில் 
மழையாயிற்று எறிகணை 
இழந்த உறவுகள் போக 
எஞ்சியவர் சித்தம் இழந்தனர் 
எல்லாம் சூன்யமாயிற்று 
அழுகுரல் நிரம்பிய மண் 
அதிர்விலிருந்து மீளவில்லை 
முள்ளிவாய்க்கால் 
முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று 

-சுருதி(junior)_


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share