திங்கள், 14 மே, 2012

ஒரு இனத்தின் அழிவு உலகக்கண்ணுக்கு முன்னால் நடக்கிறதே!

இன்று யாழ்ப்பாணத்தில் குறைந்தது இருவருக்கு 
ஒருஅரச பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 
வன்னியில் குறைந்தது ஒருவருக்கு ஒரு அரச படை 
நிறுத்தப்பட்டுள்ளது.வன்னியில் பிறக்கும் ஒவ்வொரு 
பிள்ளையை நோக்கியும் குறைந்தது ஒரு துப்பாக்கி 
நீட்டப்படுகிறது.கிழக்கின் நிலைமையிலும் எந்த 
மாற்றங்களும் இல்லை.வடக்கின் ஆளுநர் செம்மனிப்படுகொலை
உள்ளீடாய் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு 
இராணுவ அதிகாரி,கிழக்கில் கொலைகளில் 
கை கழுவும் கடற்படை அதிகாரி.இங்கு நடப்பது இராணுவ ஆட்சி அற்று வேறு என்ன?
இவை போதாதென்று எலும்புத்துண்டுக்காய் அலையும் 
அடிவருடிகளும் அவர் பரிவாரங்களும் வேறு.

    எங்கள் போராட்டத்தை இந்தியாவுடன் சர்வதேசமும் 
சேர்ந்து அழித்தது. ஐந்தில் ஒரு மக்கள் கொலை 
செய்யப்பட்டுவிட்டார்கள்.ஐந்தில் இரு மக்கள் 
புலம்பெயரப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.
எமது மண்ணில் கொலைகளும்,தற்கொலைகளும் 
காணாமல்போதல்களும் ,வெள்ளை வான் கடத்தல்களும் 
கலாச்சார சீரழிவும் மலிந்து கிடக்கிறது.இராணுவ 
ஆட்சியை ஜனநாயக ஆட்சியாய் சர்வதேசம் 
ஏற்பதுபோல் காட்டுவது வெந்த புண்ணில் 
வேல் பாய்ச்சுகிறது.
அமைச்சர்கள் அங்கீகாரம் பெற்ற
கொலையாளிகளாய்.எந்த நேரமும் எதுவும் 
நடக்கலாம்.பௌத்த பிக்குகளின் நடத்தைகள் 
எந்தவிதத்திலும் புத்தபகவானுடன் தொடர்புபடவில்லை.
இலங்கை எனும் நாட்டில் புத்தபகவானின் கொள்கைகளை 
காப்பாற்ற சர்வதேசம் தலையிடவேண்டும்.சிறுபான்மையினருக்கு 
மத சுதந்திரம் உள்ளீடாய் அனைத்து சுதந்திரமும் சர்வதேச 
துணையுடன் காவுகொள்ளப்பட்டுள்ளது. 
இலங்கைத்தமிழர் ஜனநாய வழியில் தமது
தனித்து வாழும் உரிமையை உலகுக்குஎல்லா வழிகளிலும் 
வெளிச்சமாய் ஒப்புவித்துள்ளனர்.ஐ.நா வின் 
மனிதாபிமானம் இதுவரை எமை தொடவில்லை.
எமது வாழும் உரிமையை மீட்டுத்தரவில்லை.
எமது இழப்பு போதாதென்று இன்னும்ஐ.நா பார்த்திருக்கிறதா?
ஒரு இனத்தின் அழிவு உலகக்கண்ணுக்கு முன்னால் நடக்கிறதே!  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share