செவ்வாய், 29 மே, 2012

வெற்றிடம் நிரப்ப காற்று வரும்

நண்பா!
நீ இல்லை 
இருந்தும் 
கடிதம் எழுதுகிறேன் 

தமீழீழம் எங்கும் 
எம் சுவாசம் இருந்திருக்கிறது 
இன்று எங்கும் ஆக்கிரமிப்பு 
நண்பா !
உன் புதைகுழியில்க்கூட 
நீ இல்லை 
என் ஞாபகங்கள் கிளரும் 
மாவீரர் வீடுகள் முன் 
அவன் நிற்கிறான் 

இன்னும் 
கப்பல்கள் நிற்கின்றன 
கடல் இல்லை 

இருக்கிறோம்முகவரி அற்று 
உங்கள் 
இறுதி வாக்குமூலங்களை 
சேகரித்த நாம் இருக்கிறோம்

வெற்றிடம் நிரப்ப காற்று வரும்
நம்பிக்கையை 
விதைத்துவிதைத்து 
எம் உயிர் இழுபடுகிறது 
கண் மூடினால் 
உம் முகங்கள் வரும் 
இடைவேளை அற்று 
பார்க்க விரும்பினும் 
"குற்ற உணர்வு "
ஏதோ செய்கிறது 
"இயலாமை "
எமை சாகடிக்கிறது 

நண்பா!
எதிலும் 
ஒன்றாய் இருந்து விட்டு 
பாவி! 
எமை தவறவிட்டுப்போனாய் 

 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share