சனி, 26 மே, 2012

ஈழம் எப்படி இருக்கிறது?

இலங்கை சுதந்திரம் அடைந்ததாய் 
கருதப்படும் 1948ஆம் ஆண்டிலேயே சிங்கள ஆட்சி 
குடிமைச்சட்டத்தை அறிமுகப்படுத்தி அரைவாசி 
மலையகத்தமிழரை அவர்களது விருப்பத்திற்கு 
மாறாய் இந்தியாவிற்கு நாடு கடத்திற்று.பத்து 
வருடம் ஆகமுன்பே தனிச்சிங்கள சட்டத்தை 
கொண்டுவந்ததுடன் அகிம்சைப்போராட்டத்தையும் 
வன்முறை மூலம் அடக்கிற்று.இனப்படுகொலையுடன் 
தமிழரின் சொத்துக்களையும் திட்டமிட்டு அபகரித்து வந்தது.
அடுத்து தரப்படுத்தல் 
மூலம் தமிழர்களில் மலையாய் நின்ற கல்வியை 
மட்டமாய் தரப்படுத்திற்று.வேறுவழியற்று தமிழ் 
தலைவர்கள் தனிநாடே எங்களுக்கான தீர்வு என 
முன் வைக்க மக்கள் ஏகோபித்த ஆதரவை அதற்கு 
தந்தனர்.அகிம்சை தோற்றதால் ஆயுத போராட்டம் 
தவிர்க்க முடியாமல் போயிற்று.சிங்களம் தமிழ் 
பகுதிகளை ஊடறுத்து பாரிய சிங்கள குடியேற்றத்தை 
செய்தது.செய்கிறது.உலக நாடுகள் இலங்கையின் 
பூகோள முக்கியம் கருதி போட்டி போட்டு 
இலங்கைக்கு உதவின.தங்களுக்குள் உள்ள போட்டியை 
இலங்கையை கையுக்குள் போடுவதற்காய் பாவித்தன.
போராளிகளை அழிக்கும் போர்வையில் சிங்களம் 
திட்டமிட்டு தமிழரை அழித்தது. அழிக்கிறது.
இலங்கை வழமை போல் உதவி பெற்றபின் சில நாடுகளுக்கு 
தனது நன்றியின்மையை காட்டிற்று.அதனால் சில நாடுகள் 
உண்மைகளை பேசதளைப்படுகின்றன.உண்மையில் 
உலகம் சிங்களத்துடன் சேர்ந்து அழித்தது அற்புதமாய்,
புதுமையாய் வீறுடன்எழுந்த சிறு நாட்டை.இப்போது தமிழரின் 
பூர்வீக மண் சிங்களக்குடிஏற்றத்தாலும் ,கலாச்சார 
சீர்கேட்டிட்குள்ளும் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை இருபது வீதத்திலிருந்து
பதினோரு வீதமாய் குறைந்துள்ளது.ஈழத்தமிழரின் 
பூர்வீக நிலத்தில் நாற்பது வீதம் குடியேற்றங்களால் 
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் இனத்தின் எதிர்காலம் ஈழத்தில் 
கேள்விக்குறியாகுமா?இதுதான் உலகின் 
விருப்பமா?        


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share