வெள்ளி, 16 மார்ச், 2012

அந்த பாலகனின் உடலைப்பார்க்க மனது பிசைகிறது

அந்த பாலகனின் உடலைப்பார்க்க மனது பிசைகிறது.எந்த களவும்
தெரியாத பிள்ளை, குழந்தை மனம் இம்மியளவும் குறையாத பாலகன் .
பாடசாலை தவிர்ந்து எப்போதும் தாயின் பார்வை அவன்மீது இருக்கும் .
                                   பாடசாலைக்கு பின்பக்கம் என்வீடு,என்வீட்டுக்கு
பின்புறம் அவன் பாடசாலை விட்டு வந்து நிக்கும் முகாம்.பாடசாலையிலோ
அன்றி பின்முகாமிலோ ஏதாவது அனர்த்தமாயின் மாமா வீட்டிற்கு
ஓடிவிடு இது தாயின் கட்டளை.
                                பாடசாலைப்பாடங்களில் படுசுட்டி.ஆங்கிலப்போட்டிகளில்
எப்போதும் மாவட்ட பரிசுகளை வெல்வான்.2008 ஆம் ஆண்டுக்கான
போட்டியின்போது அவன் பேசியதையும் தந்தைவழி பேரனுக்கு அருகில்
நின்று பேசிக்காட்டியது கண்முன் நிற்கிறது.
                                   உங்களுக்கும் கடாபி மாமாவுக்கும் ஏப்ரல் fool இற்கு
கூழ் முட்டை அடிச்ச கதையை சொல்லுங்கோ .இவனது அண்ணனும்
இவனது வயதில் இந்தக்கதையை திருப்பித்திருப்பி கேட்பான்.இப்போது
கதை கேட்க யாருமில்லை.
                            தாய் வழிப்பேரனின் இழப்பின் போதுஅந்தக்குடும்பம்
கவலையில் மூழ்கிப்போயிற்று.அவனது பெயர்கூட தாய்மாமனின்
பெயர்தான்.அவனது பிள்ளைப்பருவத்தின் ஒவ்வொரு காலமும்
மீள மீள நினைவில் வருகிறது.அவனது பிஞ்சு நெஞ்சை துப்பாக்கி ரவைகள் துளைக்கும்போது நல்ல காலம் அவனது உயிர்த்தாய் உயிரோடு இருக்கவில்லை.அவனது அழகான கண்கள் மீண்டும்
பேசாதா? மனம் ஏங்கித்துடிக்கிறது.    


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share