20/05/2008 பொழுது சாயும் நேரம் , நான் விசுவமடுவில் நின்றேன். எனக்கு ஒரு அறிவித்தல் கிடைக்கப்பெற்றது. தளபதி பால்ராஜ் முல்லைத்தீவில் சாவு அடைந்துவிட்டதாகவும் postmortem report தருமாறு கேட்கப்பட்டேன். நான் உடனடியாய் கிளிநொச்சி அடைந்து வாமனையும் அழைத்துக்கொண்டு துண்டியை (postmortem செய்யுமிடம்) அடைந்தேன். நானும் வாமனும் postmortem செய்துவிட்டு எமது அலுவலகத்திற்கு வந்து postmortem report யை உரியவர்களிடம் எழுதி கொடுத்தேன். இரவு 11.30 மணி இருக்கும் இரட்ணம் மாஸ்டர் வந்தார் . நாளை காலை குறிப்பிட்ட ஒரு இடத்தில் அஞ்சலி செய்வதாகவும் தலைவர் உங்களுக்கும் அழைப்பு விடுமாறு சொல்லியதாய் சொன்னார். நான் எனது வேலைப்பளு காரணமாய் அஞ்சலி நிகழ்விற்கு செல்லவில்லை.தலைவர் அதை புரிந்திருப்பார்.
செவ்வாய், 19 மே, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக