திங்கள், 11 மே, 2015

போற்றப்படவேண்டியவர்கள்

2009 இறுதிப்போருக்குப்பின் சுமார் 3 இலட்சம்  மக்கள் அரசால் செட்டிக்குள பகுதியில் நடாத்தப்பட்ட திறந்தவெளி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். தொற்று நோய்களாலும் , உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்தோம். முள்ளிவாய்க்கால் வரை தொற்று நோயில் இருந்து காத்த மக்களை இங்கு இழந்துபோனோம். மக்கள் துன்பங்களை ,கெடுபிடிகளை அனுபவித்தனர். அரசாங்கம் பொய்த்தகவல்களை வெளியுலகிற்கு சில  தமிழ் அதிகாரிகளின் துணையோடு சொல்லிற்று.
விடுதலைக்காய் போராடியவர் வாழ்வு நிர்க்கதியாயிற்று. உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் எம் மக்களுக்கு/போராளிகளுக்கு  உதவ தகுந்த தமிழர் கட்டமைப்புகள் இருக்கவில்லை.போராடிய மக்கள் தாங்களாக இழுத்து இழுத்து எழுந்தார்கள்.அரசியல் உள்நோக்கில் சில உதவிகள் தெளிக்கப்பட்டதை மறுப்பதற்கில்லை.
எம் மக்களின் காயங்கள்/ வேதனைகள்  மாறாத இக்காலத்தில் தங்களது வேதனைகளை/ காயங்களையும் தாண்டி வெளியுலகிற்கு உண்மையை துணிந்து வெளிப்படுத்திய நேரடிசாட்சிகள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள்.
  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share