வெள்ளி, 8 மே, 2015

சுதர்சன்

சுதர்சன், மருத்துவப்போராளியாய் ,களமருத்துவனாய் இரவு பகலென ஓய்வற்று உழைத்தவன். சுதர்சனை நினைக்கையில் கஜேந்திரன்,அன்பு,மணிமாறனின் நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.
  x ray technician, பல்மருத்துவன் பின் தமீழீழ சுகாதாரசேவையின் பல்மருத்துவப்பிரிவின் பொறுப்பாளானாகையில்  இன்னும் ஒரு படியுயர்ந்தான். அவனும் அவனின் பற்சிகிச்சைப்பிரிவும் பல பல ஆயிரம் மக்களுக்கு  அந்த போர்ச்சூழலிலும்  பற்சிகிச்சை வழங்கியமை போற்றப்படவேண்டியது.அவனின் பற்சிகிச்சைப்பிரிவு பற்சிகிச்சை வழங்க செல்லாத பாடசாலை புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் இருந்திருக்க நியாயமில்லை.


வைகாசி-17,பெரும்பாலான சனங்கள்  இராணுவப்பிரதேசத்திற்குள் போய் விட்டிருந்தார்கள். நான் சுதர்சனை இராணுவப்பிரதேசத்திற்குள்  போகுமாறு திருப்பித்திருப்பி சொன்னேன். அவன் நான் உரியவர்களுடன் சென்றபின் போவதாய் திருப்பித்திருப்பி சொன்னான். இராணுவம் எல்லாப்பகுதியாலையும் எங்களை நெருங்கிவிட்டது. சுதர்சன் எங்களுக்குரிய எல்லோருக்கும் மீண்டும்   மீண்டும் தொடர்பெடுத்தான். ஒருவரின் வோக்கியும் வேலை செய்யவில்லை. கடைசியில் கொஞ்ச சனம் இராணுவப்பிரதேசம் நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். சுதர்சன் சொன்னான் " இதுதான் கடைசி சனம் இதையும்விட்டால் போகேலாது, தலைவரை எப்படியும் பாதுகாப்பாய் கொண்டுபோய் இருப்பார்கள், நாங்கள் போவோம்" எனக்கும் யாவும் சரிபோல் பட்டது. அந்தக்கணத்தில்த்தான் இராணுவப்பகுதிக்கு
போக தீர்மானித்து, போகிற  கொஞ்ச சனங்களுடன் இணைந்தோம்.

   எனது கணிப்பின்படி மக்கள் இனி இங்கு இருக்க சந்தர்ப்பம் இல்லை. எனக்கு தரப்பட்ட மக்களுக்குறிய பணியை ஓரளவு நிறைவு செய்ததாய் மனம் சொன்னாலும், எனக்கு தரப்பட்டஏதோ பணி ஒன்றை செய்யதவறிச் செல்வதாய் ஆழ்மனம் குறுகுறுத்துக்கொண்டிருந்தது.  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share