வெள்ளி, 22 மே, 2015

திலீபனிடம் ஒரு "அசட்டுச்சிரிப்பு"

1984
நானும் அருணனும்
ஊர் ஊராய் "களத்தில்" பத்திரிகை
விற்றுத்திரிந்தோம்
பொழுது புலர புறப்பட்டு
பொழுது சாய வருவோம்
அன்றும் ஒரு மதியம்
அரச உத்தியோகத்தர் ஒருவரின்
பேச்சில் தலைகுனிந்தோம்
நீங்கள் யாரடா? பள்ளிக்கூடம் தெரியுமாடா?
வீட்டில கஞ்சிக்கும் வழியில்லையா?
சாதித்தொழிலும் தெரியாதா?
நாம் எதுவும் கூறவில்லை
சைக்கிளை எடுத்து புறப்பட
மீண்டும் அழைத்தார்
உங்களுக்கு வெட்கமில்லையா?
நாம் எதுவும் கூறவில்லை
காசு தந்து பத்திரிகை கேட்டார்
அருணன் என்னைப்பார்த்தான்
நான் தலையாட்ட
காசுவாங்கி பத்திரிகை கை மாறிற்று
பாதை நீள நாம் கதைக்கவில்லை
அருணன் நடந்ததை திலீபனிடம் கூற
திலீபனிடம் ஒரு "அசட்டுச்சிரிப்பு"
பத்திரிகையை தொடர்ந்து வெளியிடவேண்டும் 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share