செவ்வாய், 12 மே, 2015

லோலோ இந்த சம்பவத்திலேயே காயமடைந்தார்.

அந்த நாள் , வைகாசி-12/2009. நான் சத்திரசிகிச்சைகூடத்தில் இருந்து அருகிலுள்ள ஓய்வு tent இற்கு வந்திருந்து ஒரு குத்தியில் குந்தியிருந்தேன். எனக்கு அருகில் இசைவாணனும் தனது பொய்க்காலை கழற்றிவைத்துவிட்டு குந்தி இருந்தார். எனக்கு முன்னாள் நின்று எமது தொற்று நோய்த்தடுப்பு பொறுப்பாளர் லோலோ   தொற்று நோய்த்தடுப்பு சம்மந்தமாக கதைத்துக்கொண்டு இருந்தார். திடீரெனெ ஷெல் வரும் சத்தம் அருகில் கேட்டது, வெடித்தவுடன் எரியத்தொடங்கியது.எங்களுக்கு பின்புறமாகவும் மேற்பக்கமும் எரிந்து கொண்டிருந்தது.நான் திடீரெனெ முன்பக்கமாய் ஓடினேன்.லோலோவும் ஓடிவிட்டார் . இசைவாணனை காணவில்லை . நான் குனிந்தபடி திரும்பிப்போனேன்.இசைவாணன் நிலத்தில் ஊர்ந்தபடி வந்துகொண்டிருந்தார். நான் குனிந்தபடி போய் பொய்க்காலை தூக்கிவந்து இசைவாணனிடம் கொடுத்தேன். அந்த பகுதியே எரிந்துகொண்டிருந்தது.சுற்றவர மக்கள் ஓலம் காதைகிழித்தது . லோலோ இந்த சம்பவத்திலேயே காயமடைந்தார். எனக்கு முதுகிலும் காலிலும் எரிகாயங்கள் ஏற்பட்டது.  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share