சனி, 20 ஜனவரி, 2024

மனதில் வெட்கையெனினும் வளவினுள் வெள்ளம்

 நான் சிறுவன் 

வேலியில் ஒரு பெரிய பூவரசு 

அம்மம்மாவின் வயதிருக்கும்

பச்சை இதயமாய் விரிந்த இலைகள் 

மஞ்சள் இலைகளின் நிலக்கோலம் 

இலைகள் ஆட்டுக்கு குழை  

எங்களுக்கு பீப்பீ 

சிறார்களுக்கு உள்ளங்கை கோப்பை 

பூவரசு அணில்களின் கோட்டை   

புலுனிகளின் கச்சேரி மேடை 

கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் குளிர்மை     

பூவரசின் நீண்டகிளைகள்

கதியால்களாகும் நம்பிக்கை 

பூவரசம்பூ பூவுலகின் அதிசயம் 

  

பிறிதொருநாள் 

பூவரசு பட்டு விறகாகியிருந்தது

அந்த இடத்தில மதில் ஓடிற்று 

நிழல் இல்லை 

மதில் மேல் பூனை 

மனதில் வெட்கையெனினும்

வளவினுள் வெள்ளம்         



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share