வெள்ளி, 26 ஜனவரி, 2024

எனது வாழ்விடம் காணாமல் போயிற்று

ஒரு சிறிய ஊர் அநேகருக்கு அநேகரை தெரியும் ஆள் ஆளுக்கு பட்டப்பெயர்கள் இருக்கும் பொலிஸ் வந்ததில்லை யாருக்கும் ஒன்றென்றால் ஊரே ஒன்றாகும் பகட்டுமில்லை பட்டினியுமில்லை ஆசிரியர் மாணவரை தந்தை பெயர் சொல்லியே அழைப்பர் செருப்புகளற்று நடந்துதிரியும் பட்டம் ஏற்றும் மணல் வெளி பறவையொன்று வானத்தில் படர்ந்து கடலில் இறங்கி வள்ளத்தில் ஏறிற்று என்ற புனைவற்ற கிராமம் பறவைகள் மாடுகளில் மரங்களில் முற்றத்தில் நாளும் கூடும் சந்தையோடு கோலாகல கோயில் திருவிழாக்களும் நாடகங்களும் தாச்சி விளையாட்டும் வேறு என்ன வேணும்? பொய் இல்லை போட்டி இருக்கும் வண்டில்ச்சவாரி கிட்டியடியென நாளும் பொழுதும் நீளும் எனது அழகிய வாழ்விடம் ஒரு பகலுக்கும் இரவுக்கும் இடையில் காணாமல் போயிற்று


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share