ஞாயிறு, 28 ஜனவரி, 2024

வேரறுந்த வாழ்வில் வாசமில்லை

என் சிறுபராயம் தாய்வழி பேரனுடனான சம்பாஷணை இலக்கியத்தின் ஒரு முகம் பூர்வீகம் மறுமுகம் வாழ்வியல் அதன் அகம் தோட்டமும் துரவும் வண்டிலுமாய் எனக்குள் ஓடுகிறது பந்தம் மூதாதையர்களை தேடும் பயணம் என்னோடு முடிந்துவிடுமா? புலம்பெயர்ந்ததின் விளைவு எங்கு போய் முடியும்? முதுசொம்களை தொலைத்த வாழ்வில் பவுசு இருந்தென்ன? இழப்பதற்கு எதுவுமில்லையெனினும் தாய்நிலம் துறவாதீர் ! தாயைப்போல யாருமில்லை வேரறுந்த வாழ்வில் வாசமில்லை தாகத்திற்கு கானல் நீர் தீர்வுமில்லை


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share