செவ்வாய், 30 ஜனவரி, 2024

மீளவும் வரப்போவதில்லை

புகைப்படம் பார்க்கிறேன் கண்கள் அசைய மறுக்கிறது நீ உயிராய் என் முன் யாவும் காட்சியாய் விரிகிறது கனதியான வாழ்வு மீளவருகிறது ஆவலில் உற்றுப் பார்க்கிறேன் நீயில்லை எதுவும் நிஜமில்லை கண்ணீர்ப்படலம் உன்னை மறைக்கிறது பறவையொன்று உள்ளங்கையில் இறங்கிற்று சிறகினில் கவிதையினை கிறுக்கிறேன் அது உயர பறக்கையில் பாடலாகிறது நண்பா! நீ மட்டுமில்லை நீயும் நானும் உலாவிய ஒழுங்கைகள் வடலி நிறை பனை வெளி உணவு தரும் குடிசைகள் மீளவும் வரப்போவதில்லை


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share