வெள்ளி, 23 மார்ச், 2012

தயவுசெய்து உங்கள் வாழ்விற்காய் இனத்தை பணயம் வைக்காதீர்.

உலக தமிழர் ஒன்றாய் நின்று சிங்களத்திற்கு சிறு அடி கொடுத்துள்ளனர்.வைகாசி 18 உடன் யாவும் முடிந்தது என்றே
சிங்களம் கர்ச்சித்தது.சுயநலனுக்காய் காட்டிக்கொடுக்கும் சில
தமிழ் கோடரிகளையும் பாவித்து தமிழர்களில் அக்கறையுள்ளவர்
போல் வேசமிட்டு தமிழ் இன,நில அழிவை திட்டமிட்டு
முன்னகர்த்துகிறது. திரைக்கு முன்னும் பின்னும் இனச்சுத்திகரிப்பு நடை பெறுகிறது.
                                           தமிழர்கள் சோர்ந்து விடாமல் இனப்படுகொலையை,
சிங்களத்தின் உண்மைமுகத்தை உலகத்திற்கு தெரிவித்து
வருவது பெருமைகொள்ளத்தக்கது.கடமை சார்ந்தது.உலகமெல்லாம் பரப்புரையை நாம் தொடரவேண்டியிருக்கிறது. இனத்தை,இன அடையாளங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எல்லா
தமிழருக்கும் பொதுவானது.
                                        ஐ நா விசாரணை அறிக்கையையோ/ஐ நா தீர்மானத்தையோ
சிங்களம் மதிக்கப்போவது இல்லை.நஞ்சூறிய ஆக்கிரமிப்பு இனம்.கண்
மூடி பால் குடிக்கும் வதை அரசியல் புரியும் திமிர் முத்திய சர்வாதிகார மனம் .
                                தமிழர்களே! நீங்கள் எங்கிருந்தாலும் ,விடுதலைக்காய்
உழைக்காவிட்டாலும் விடுதலைக்கு எதிராய் ஒரு துரும்பளவேனும்
பாதகத்தை செய்திடாதீர்.விடுதலைக்காய் அனைத்து தியாகங்களும்
செய்பட்டாயிற்று.  தயவுசெய்து உங்கள் வாழ்விற்காய் இனத்தை
பணயம் வைக்காதீர்.
                                  ஈழத்தமிழனுக்கு கிடைத்த /அநேகரால் விரும்பப்பட்ட
ஒரே ஒரு தலைவன் பிரபாகரன்தான். அதீத அர்ப்பணிப்புகளால்
அவன் என்றும் தம் மக்களுடன் வாழ்வான்.எல்லாத்தமிழரும்
முடிந்தவரை சர்வதேசத்திற்கு எம் நியாயங்களை ஏதோ ஒருவகையில்
சொல்வோம்.எங்களுக்குள் அடிபடுவதை தவிர்ப்போம்.இலட்ச்சியம்
சாவதில்லை நிரூபிப்போம்.

                                             - நிரோன்- 


Share/Save/Bookmark

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தமிழரே முடிந்தால் அணிலுதவி அல்லது ஒதுங்கியிருங்கள். எம் விடுதலை பெற்றுக் கொள்ள எம்மால் முடியும். எம் தலைவன் வழி காட்டியுள்ளான். தயவு செய்து உங்கள் தாயை காட்டிக் கொடுக்காதீர்கள்.

கருத்துரையிடுக

Bookmark and Share