செவ்வாய், 8 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 35


1981 ஆம் ஆண்டு மே மாதத்தில் நானும் இணைத்தலைமையாக இருந்து ஒரு நாள் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டத்தை செய்தோம். யாழ் நூலகத்தை இலங்கை அரசு எரித்ததற்கான அடையாள போராட்டம். அன்று அந்த போராட்டத்தை வெற்றியாக்கி அந்த இடத்தைவிட்டு நகர்கையில் இராணுவம் அந்த இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. எமக்கு தெரிந்த ஒருவரே இராணுவத்திற்கு பாடசாலைக்கு அருகில் இருந்த தபாற்கந்தோரின் தொலைபேசிக்கூடாக தகவல் கொடுத்திருந்தார். அந்தக்காலத்தில் இருந்து போராட்டவாழ்வு ஏதோவொருவகையில் பொதுவெளியில்   தொடர்ந்து கொண்டிருக்கிறது.  1985 இல் என்னை இராணுவம் தேடியது  .   நளின் செனிவரத்ன என்ற இராணுவ பொறுப்பதிகாரியே எனது பல்கலைக்கழக பீடத்துடன் தொடர்புகொண்டு என்னைப்பற்றி விசாரித்திருந்தார். நான் எந்தவித குற்றங்களிலும் ஈடுபடாமல் போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆரம்பகால அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து மருத்துவப்பணி முடித்து நீதிக்கான பங்களிப்பு வழங்கி நான் நகர்ந்துகொண்டிருக்கிறேன்.          


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share