வெள்ளி, 4 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 34

 
 சமாதானகாலத்தில் ( ரணில் பிரபா ஒப்பந்தகாலம்) இயக்கத்தில் சிலருக்கு க பொ த உயர்தரம் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. விரும்பிய சிலருக்கு கிடைக்கவில்லை. நான் தமிழீழ மருதுவக்கல்லூரியை பொறுப்பெடுத்த ஆரம்பகாலம் மலரவன் அவர்கள் என்னை சந்திக்க வந்தார். பிரியவதனா க பொ த உயர்தரம் படிக்க விரும்புவதாக சொன்னார். நான் அனுமதி கொடுத்து , யாரிடமும் சொல்லவேண்டாம் , அப்படி யாரும் அறிந்து கேட்டால் நான்அனுமதி தந்ததாக சொல்லுங்கள் என்று சொல்லி சில உதவிகளையும் செய்தேன். பின்  பிரியவதனா மருத்துவபீடத்திற்கு தெரிவானதும், அண்ணையின் மகள் துவாரகாவிற்கும்  பிரியவதனா படிப்பித்தார். கிளி பொன்னம்பலம் மருத்துவமனையில் மலரவனினதும் பிரியவதனாவினதும் மருத்துவப்பணி பொன் எழுத்துக்களால் பொதிக்கப்படவேண்டியது.

   


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share