வியாழன், 17 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 41


எனது போராட்டகாலத்தின் ஆரம்பம் எது? எனக்குள்ளேயே கேட்டுக்கொள்கிறேன். சிறுவயதிலேயே பலவிடயங்களை தெரிந்தோ தெரியாமலோ அறிந்திருக்கிறேன். எனது போராட்ட பின்னணி அழகானதுதான். நான் எப்போதும் மனித உயிர்களை மதிப்பவன். மனிதர்களுக்குள் வேறுபாடுகாண்பது என்றும் எனக்கு விருப்பமானது அல்ல. இருப்பினும் நான் இராணுவ முகாமைத்துவத்தில் ஓரளவு நன்றாக புடம்போடப்பட்டேன். அதற்கு தலைவர்( அண்ணா) என்மீது காட்டிய ஈர்ப்புத்தான் காரணம் என்று நினைக்கிறேன். அதுகூட ஏன் என்று இன்றுவரை புரியவில்லை. நான் இலகுவில் வளைந்துகொடுப்பவனில்லை. நான் நினைப்பதைத்தான் செய்துவந்திருக்கிறேன். நான் போராட்டகாலத்தின் இறுதிவரை நேர்மையாக உழைத்திருக்கிறேன். எப்படியிருந்தாலும் இப்போது மனதை வாட்டுவது தலைவனின் இறுதிக்கணத்தில் அவரோடு இருக்கவில்லை என்பதே. நான் அவரது தனிப்பட்ட மருத்துவன் நான் அவரோடு இருந்துதான் இருக்கவேண்டும். அண்ணா இன்னுமொரு பிறப்பிருந்தால் உங்களது தம்பியாகவே பிறந்துவிடவேண்டும். நான் இப்பிறப்பில் செய்யாத கடன்களை அடுத்த பிறப்பிலாவது செய்துவிடவேண்டும்.       
   



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share