செவ்வாய், 15 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 40

கிளி முல்லை மாவட்டங்களின் வருமுன்காப்பு சுகாதார அணியினர் ( இலங்கை செஞ்சிலுவை சங்க சுகாதார பணியாளர் உள்ளீடாய் ) அநேகமானோர் என்னாலும் நேரடியாய் வளர்க்கப்பட்டவர்கள் ஆதலால் நான் தமிழீழ சுகாதாரசேவையை பொறுப்பெடுக்கும்போது எப்படியும் இந்தப்பிரதேசத்தில் தொற்றுநோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையிருந்தது. இறுதிவரை அந்தநம்பிக்கை வீண் போகவில்லை. தமிழீழ சுகாதாரசேவைகளின் தொற்றுநோய் தடுப்பு பொறுப்பாளர் லோலோ அவர்கள் படுகாயம் அடைந்து படுத்துக்கிடக்கும்போதும் இறுதியாய் அவர் என்னிடம் வினவியதும்  தொற்றுநோய் தடுப்பு பற்றியே. முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறும்போதும் மனதுக்கு சிறு ஆறுதலாய் இருந்தது  தொற்றுநோய் தடுப்பின் வெற்றியே.       

         


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share