ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு பிற்காலம் , கரடிப்போக்கிற்கும் கிளி பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் அமைந்திருந்த பசுமை கட்டிடத்திற்கு மேற்கட்டிடத்தில் Children development council ( CDC ) நிர்வாகக்கூடம் நடைபெற்றது. CDC இற்கு பொறுப்பாக ரவி அண்ணை ( சூட்டி, மகேந்தி அவர்களின் அண்ணன் ) இருந்தார். பிரான்சிஸ் அடிகளார் CDC யின் தலைவராக இருந்தார். CDC வடகிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து வயதிற்கு ( முன்பள்ளி) குறைந்தவர்களின் முன்னேற்றத்திற்காக TRO அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தது. CDC யின் ஆலோசகராக நான் இருந்தேன். அதுதான் CDC யின் இறுதிக்கூட்டம் என்று அன்று நான் நினைக்கவில்லை. கூட்டம் முடிந்தபின்பும் ரவி அண்ணை, நான், பிரான்சிஸ் அடிகளார் நீண்டநேரம் உரையாடினோம். உரையாடலில் சிறுவர்களுக்கான திட்டங்களும் கரிசனைகளுமே இருந்தன.அதற்குப்பின் எவ்வளவோ நடந்து முடிந்துவிட்டது. இப்போது வாழும் சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது. எனக்குத்தான் இப்படியிருக்கிறதோ தெரியவில்லை.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share