வியாழன், 15 பிப்ரவரி, 2024

நீண்ட கனவுக்குப்பின்னால் எங்களுக்கென்று எதுவுமிருந்ததில்லை பெருங்கனவு கனவானதும் இழப்புகளின் ஊமைக்காயம் இதயத்தினுள் வளர்ந்து கொண்டிருக்கிறது உப்புக்குருதியில் வளரும் காயத்திற்கு மருந்தில்லை முடிவுமில்லை பனிமூடும் இரவுகளில் தனித்திருக்கிறேன் பனிப்படர்க்கையின் வெண்நிறம் ஆவிகளின் உடைபோல சூழ்ந்திருக்கிறது மூச்சு விடவும் ஆவிவருகிறது யாவும் உறைந்திருக்க கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது சொல்வழி கேளாதவன் போல குருதிற்குள் வாழ்ந்த என்னிடம் "குருதியின் நிறம் சிகப்பு" என சொல்கிறான் ஒருவன் ஓ! அப்படியா என நகர்கிறேன் ஆச்சரியமாய் பார்க்கிறான் இரக்கமற்றவன் என நினைக்கிறான் பூசி மெழுகிய இரண்டாவது வாழ்க்கையில் எதையும் நினைத்துவிட்டுப்போகட்டும்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share