சனி, 4 மே, 2024

நானும் வன்னியும் - சிலநினைவுகள்

எனக்கு இலக்கம் இருபத்தியாறு ஒரு பொருந்தா இலக்கம் போல் இருக்கிறது. கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையின் இணைப்பாளராக இருபத்தியாறு சேவைகளைத்தான் என்னால் நடாத்த முடிந்திருக்கிறது . இருபத்தியாறு தடவைகள்தான் என்னால் இரத்தம் வழங்கக்கூடியதாக இருந்திருக்கிறது. வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் சுகாதார நோய்த்தடுப்பு கடமைக்காக நான் சென்று வராத பாதைகள் ஒழுங்கைகள் இருக்கமுடியாது என நினைக்கிறேன். ஒரு சராசரி சத்திரசிகிச்சை மருத்துவர் தன் வாழ்நாளில் செய்கின்ற சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கையைவிட நிச்சயமாக நான் அதிகம் செய்திருப்பேன்.என் சத்திரசிகிச்சைகளின் பெறுபேறுகளும் சிறந்தது என்பதில் எனக்கு ஆத்ம திருப்தியிருக்கிறது.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share