நண்ப!
தேச விடுதலைக்காய்
சுவாசித்தவன் நீ
கள அருகில் மூச்சை நிறுத்திக்கொண்டாய்
ஓடி வந்தேன்
உறுதி செய்து பணிந்தபின்
கடமை அழைத்தது
உடல் கணச்சூடு கூட இறங்கவில்லை
சில மணித்துளிகள் கூட
உன்னோடு நிற்கவில்லை
மன்னித்துவிடு !
நீ என்னை அறிவாய்
காயமடைந்த குழந்தையை தூக்கியபடி
ஒருவன் ஓடிக்கொண்டிருந்தான்
அவனுக்குப்பின்னால்
நானும் ஓடிக்கொண்டிருந்தேன்
பின் காலங்களில்
எவ்வளவு நாட்களை
வீணாக செலவளித்திருப்பேன்
அன்று சாத்தியப்படவில்லையடா
உன் கதையை என்னில் ஏற்றிவிட்டு
எங்கு போனாய் நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக