ஆதிதொட்டு
மாற்றங்கள் நடக்கின்றன
பல மொழிகள்
சில விலங்கினங்கள்
சில மனித இனங்கள்
உலகில் இன்று இல்லை
மனிதன் மட்டுமல்ல
இயற்கையும் துணைபோகும்
நிலைப்பதற்கு
தனித்துவம் மட்டும் போதாது
சூழலோடு இணைந்த பலமும் தேவை
வேரிழந்த புலம்பெயர்வு ஆபத்து
இன்று நீ அறியாய் - இது
தாயக கோட்டையின்
அத்திவாரங்கள் கிண்டப்படும் காலம்
ஏதோ ஒரு மாயையில் உழலும் கோலம்
யானை சாப்பிட்ட விளாம்பழம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக