ஞாயிறு, 31 டிசம்பர், 2023

துடுப்பில்லா படகில் நான்

நீங்களில்லா பூமியில் 

நான் திரிகிறேன் 

ஒரு அநாதையை போல 

எண்ணி எண்ணிப்பார்க்கிறேன் 

என்னிடம் பலவும் உண்டு  

நீங்கள் தான் இல்லை 

நீங்களே என்னை நிரப்பியிருக்கிறீர்கள்

உழைப்பு, அர்ப்பணிப்பு, அழுகை, சிரிப்பு யாவும் 

கலந்த அந்த நாட்களில் நாங்கள் வாழ்ந்தோம் 

ஒவ்வொருவராய் இழக்கையில்

புழுவாய் துடித்ததும் 

ஓர்மமாய் எழுந்ததும் இன்றில்லை  

மக்களுக்காய் உயிர் சுமந்த ஆத்மபலம் இன்றில்லை 

நீங்களில்லா பூமியில் 

துடுப்பில்லா படகில் நான்      



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share