முதியமுகத்தில் தெரியும் வரிகளில்
யாரும் வாசிக்கமுடியா எழுத்துகள்
அக்கதைகளை AI ஆவது கிரகிக்குமா ?
எழுதிய கதைகளை வாசிக்கமுடியவில்லை
எழுதாத கதைகளை எப்போது வாசிப்போம்?
இன்று இருமி இருமி ஏதோ
சொல்லமுனையும் மனிதனால்
அன்று அடுப்பெரிந்தது
வீடு நிறைந்தது
மூட்டை தூக்கிய முதுகுகளின் கூலி
எப்போது தீர்க்கப்படும்?
கடவுள்களில் கூட
பாகுபாடு காட்டும் உலகம்
மனிதர்களை விட்டுவிடுமா?
முதியவரின் சுவாசம்
காற்றோடு கலந்தபடியே நின்று விடக்கூடும்
நாளங்கள் பளிச்சென தெரியும் கைகால்களில்
ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால்
ஓய்ந்துவிடக்கூடும்
அது இன்றாக இருக்கக்கூடுமா?
எனக்குள் ஊடுருவும் அவரது கண்கள்
ஏதோ ஒன்றை தேடுகின்றன
அது என்ன?
கற்றது கையளவுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக