சனி, 30 டிசம்பர், 2023

தாயிற்கு எதுவும் தெரியவில்லை

இருபது வருட சிறைவாழ்வு 

இரு தடவை சிறைக்கலவரம்

மயிரிழையில் உயிர்தப்பி  

உருமாறி விடுதலையாகி 

ஊர் ஒழுங்கையை கண்டுபிடித்து  

பலநாள் சேமித்த ஆசையுடன் வீடுவந்து 

அம்மா ! என்று திகைப்பூட்ட  

தாயிற்கு எதுவும் தெரியவில்லை 

" மறதி நோய்"


சுற்றத்தில் சுகவிசாரிப்புகள் இல்லை 

வேலிகள் மதில்களாயிற்று 

ஒரே ஒரு நண்பன் 

இங்கு குழந்தைகுட்டிகளோடு இருக்கிறான் 

தெரிந்தும் தெரியாத ஊராயிற்று 

தந்தையின் சாய்மனைக்கதிரைதான் 

தஞ்சம் தருகிறது 

விடிந்தும் விடியாத காலமிது 




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share