சாற்றப்பட்டிருக்கிறது யன்னல்
பூட்டப்பட்ட கதவில் தொங்குகிறது ஆமைப்பூட்டு
எந்த அரவங்களும் இல்லை
அப்பு எங்கே ?
மூடப்பட்ட கக்கூஸில் புகை வரவில்லை
முற்றத்தை நிரப்பியிருக்கிறது கொட்டிய இலைகள்
கிணற்றடி வாய்க்கால் காய்ந்துகிடக்கிறது
இறந்துவிட்டாரா? புலம்பெயர்ந்துவிட்டாரா?
மருத்துவமனையிலா? வீட்டை விற்றுவிட்டாரா?
ஆவென்று திறந்திருக்கிறதே படலை
அவசரத்தில் ஓடியிருக்கிறாரா?
யாரோ வரும் அரவம் கேட்கிறது
திரும்பிப்பார்க்கிறேன்
அநாதைப்பிணம் , போனமாதம் , தலை சுற்றுகிறது
எங்கிருந்து வருகிறாய்?
திடுக்குற்றேன் "சிறையிலிருந்து"
ஏன் அழுகிறாய்?
வீட்டுக்குள் ஒரு கனவு இருந்ததே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக