ஞாயிறு, 24 டிசம்பர், 2023

ஆளும்வர்க்கம் வேறு என்ன செய்யும்?

 பழங்குடி மக்களுக்கு விடுதலை இல்லை 

ஒருகாலம் 

இன்றைய பலநாடுகள் அவர்களுடையது 

உலகமெலாம் அருகிப்போகிறார்கள் 

அவர்களிடமும் இசை நிறைந்த வாழ்விருக்கிறது 

எங்களை ஒத்த குருதியே அவர்களிடமும் ஓடுகிறது

இருந்துமென்ன ?

அவர் வேதனையின் பாடல் யாரும் கேட்பதில்லை  

உணர்வுகளை உணர ஆட்களில்லை 

அவர் வேரடியை /மொழியை யார் அறிவார் ?

புதுவருடம் வருகிறது - அதை 

உலகம் வர்ணமயமாய் கொண்டாடும் 

அவர் இதை அறியார்  

வாழ்விடங்களை தாண்டிவரா குரல் 

பல வித்தைகள் தெரிந்தும் விஞ்ஞானம் வளரவில்லை 

அவர்களை ஆராய்ச்சியிற்கு பயன்படுத்தும்  

நவீனத்தால் யாது செய்யமுடியும்?

 

 


 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share