சனி, 16 டிசம்பர், 2023

இருள் இன்னும் கலையவில்லை

 இருள் இன்னும் கலையவில்லை 

வேலையிடம் செல்லும் காலைப்பேருந்து

எனைப்பார்த்து புன்னகைத்து போகிறார்கள் 

பொம்மைகள் போல உடையணிந்த குழந்தைகள் 

அவர்களுக்குள் எப்போதும் ஆனந்தம் 

அவர்களால் விடியும் எனது காலை    

கண்களை மூடினேன் 

காஸாவின் குழந்தைகள் 

உணவில்லை, சேர்ந்து விளையாடியவர் இல்லை ,

தந்தையில்லை , இருட்டுலகம் 

இழப்பின் வலி அவர்களுக்குத்தான் 

மற்றவர்களுக்கு வெறும் செய்தி

வலிகளுக்குப்பின்னால் ஐநாவின் தோல்வி 

மனிதர்களுக்குள் வாழும் மிருககுணம் 

கூர்ப்புக்கொள்கையை உறுதிசெய்கிறது   

பேருந்தின் மணியோசையில் திடுக்குற்றேன் 

மீண்டும் கண்களை மூடுகிறேன் 

நான் காவிய குழந்தைகளின் உடல்கள், 

சிறுவர்களின் கைகால்கள்,பிஞ்சு பாதங்கள் 

நெஞ்சை உழுது அழுத்த 

கண்ணீர் கன்னத்தை சுட 

ஒட்டிய கண்கள் திறக்கின்றன 

நான் இறங்கவேண்டிய இடம் கடந்தும்

இருள் இன்னும் கலையவில்லை  

 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share